அகமது,அமரன் அல்பான்ஸ்
முக்கணன் மாலவன் நான்முகன் என்னும்
முத்தேவரைத் தொழும் இந்துக்கள் எனினும்
மெக்கா செல்லும் முஸ்லிம்கள் எனினும்
மேய்ப்பர் ஏசுவைத் தொழுபவர் எனினும்
சிகைதனை முடிந்த சீக்கியர் எனினும்
அகமது,அமரன், அல்பான்ஸ் எனினும்
அகமது ஒன்றாய் அமைதியைக் காத்து
நகமும் சதையும் இணைந்துளவாறே
விகுதிகள் விடுத்து வாழும் நெறியால்
நிகரில் நாடெனும் புகழினைச் சேர்ப்போம்.
வாழ்க்கை
ரமேஷ் (கனித்தோட்டம்)