காதல் கடிதம்

கள்வா
கணவா
என் காதலா !!

பூட்டி வைத்த ஆசைகளின்
திறவுகோலாய் இக்கடிதம் !!

"உன்னோடு சேர்ந்து
மழை ரசிக்க வேண்டும்
மழையோடு சேர்ந்து
நீ எனை ரசிக்க வேண்டும்

மணி நேரம் மறந்து
நாம் உரையாட வேண்டும்
உன் இடையிடை குறும்பினால்
நான் கெஞ்சி சினுங்க வேண்டும்

மாலை தீண்டையில்
உன் வாசம் உணர வேண்டும்
மிச்சமேதும் இன்றி
முத்த மழை வேண்டும்

உன் கண் இமைக்கா பார்வையில்
நான் நாணம் அறிய வேண்டும்
உன் கைகளுக்குள் நானே
சிறைக் கைதியாக வேண்டும்

உன் மடியே தலையணையாய்
நான் மயங்கி கிடக்க வேண்டும்
நீ துயில நானோ
பஞ்சணையாக வேண்டும்

மௌன மொழி பேசி
செல்லம் கொஞ்ச வேண்டும்
என் வளையல் ஓசைக்கும்
உனக்கர்த்தம் புரிய வேண்டும்

எனை துன்பம் திண்கையில்
உன் தோல் சாய வேண்டும்
உன் சோகம் அறிகையில்
உன் தலைக்கோர வேண்டும்


கரை சேரத் துடிக்கும்
இலை போல்
உனை சேரத் துடிக்கும்
இவ் வீணை

நீ தீண்ட காத்திருக்கும் !!"

-ர .வாசுகி ரவி

எழுதியவர் : -ர .வாசுகி ரவி (16-Oct-15, 7:40 pm)
சேர்த்தது : வாசுகி ரவி
Tanglish : appavin dairy
பார்வை : 103

மேலே