நினைத்த இடத்தில் கதவு

மாடிவீட்டு முனுசாமி சோகமாக உட்கார்ந்திருந்தார் காலில் ஒரு கட்டுடன்.....

குழந்தை மனசுள்ள மனிதர்.... இப்படி உட்கார்ந்திருந்ததை பார்த்த போது, உடனே என்னவென்று கேட்கத்தோன்ற, நான் மெல்ல அருகில் சென்றேன்....

"என்னங்க கால்ல கட்டு... நேத்து நல்லாத்தானே இருந்தீங்க..."

என் கேள்வியைக் கேட்டதும் சுதாகரித்தவர்... என் முகத்தில் கண்ட பரிவு கண்டு மெலிதாக புன்னகைத்தார்.....

அவர் திருவாயைத் திறந்து, என் கேள்விக்கான பதிலளித்து முடித்த‌ பொழுது... பரிவோடு நின்றிருந்த நான், சிரிப்போடு நின்று கொண்டிருந்தேன்... லேசான முறுவலில் இருந்தவர்.... தீர்க்கமான முகமாய் மாறியிருந்தார்....

"அதுவா... பொடுசுங்களோட சேர்ந்து நேத்தெல்லாம் டோரிமோன் பாத்துக்கிட்டு இருந்துட்டு தூங்கிட்டேன்... நைட்ல கனவு காணும் போது, "எனிவேர் டோர்" வந்துச்சு... அத தெறந்து குதிக்கறேன்னு நெனச்சு, எங்க வீட்டு கதவ தெறந்து குதிச்சுட்டேன்.... மாடி வீடு வேறயா.. நல்லா அடி பட்டுடுச்சு... யாருக்கிட்டயும் காரணத்த சொல்ல முடியல... நீங்களும் தெரிஞ்சுக்கிட்டதா காட்டிக்காதீங்க..."

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (8-Nov-15, 6:00 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 254

மேலே