மீண்டும் மீண்டும் ஒரு முறைஒரே ஒரு முறை- ஆனந்தி
பள்ளியே உன்னை
முதன் முதலாய்
பார்த்த அதே பிரமிப்பு
இன்றும் என்னுள்...
என்னை தாங்கிய
என் பள்ளி...
என்னை செதுக்கிய
என் பள்ளி...
என்னை தீட்டிய
என் பள்ளி...
என்னையும் உன்னதமாக்கிய
என் பள்ளி...
தேர்வுக்கு பயத்தோடு
தோழியர்களின் அரட்டையோடு
ஆசிரியர்களை பார்த்து பயத்தோடு
அன்று நடந்த அதே இடங்களில்
இன்றும் நடக்கிறேன்
கணத்த இதயத்தோடும்
கண்களில் கண்ணீரோடும்...
அன்று புகைபடம் எடுத்த
அதே இடங்கள் இன்று தடங்களாய்...
என் வகுப்பறை, பெஞ்ச், கரும் பலகை
என் துன்பத்தோடு தோள் தந்த
வராண்ட மரத்தோடு சேர்த்து
என் மனம் என
எதுவும் மாற வில்லை...
நினைவுகளை தவிர
வேறொன்றும் இல்லை துணையாக...
கண்களில் இரு துளி கண்ணீர்
என்னையும் தாண்டி பூமியோடு...
மீண்டும் வருமா அந்தநாட்கள்
ஒரு முறை ஒரே ஒரு முறை....