வழி வேறில்லை

விடாது பெய்யும் மழையால்
வெளிச்செல்ல இயல வில்லை.
தடைப்பட்ட மின்சா ரத்தால்
தொலைக்காட்சி தெரிய. வில்லை


ஒளிநாரின் ^ கம்பிகள் அறுந்து. ^ optic fibre
இணைப்புகள் இல்லா ததனால்
வலைத்தளத்தில் அங்கும இங்கும்
உலவவும் முடிய வில்லை.


மின்கலத் திறனை முற்றும்
அலைபேசி இழந்த ததனால்
நண்பர்க ளோடு கூட
நாள்முழுதும் பேசவே இல்லை..


இந்தநாள் பொழுதினைப் போக்க
வழியொன்றும் தெரிய வில்லை
நொந்துபோய் இருக்கும் இந்த
நேரத்தில் வீட்டி. லுள்ள
தந்தை, தாய், உறவுகளோடு
பேசுவோம் ; வழிவே றில்லை.

எழுதியவர் : வீ.ரமேஷ் (கனித்தோட்டம்) (15-Nov-15, 9:44 pm)
பார்வை : 59

சிறந்த கவிதைகள்

மேலே