அரும்புகள்
அள்ளி அணைக்கையில்
தவழ்ந்து வருகையில்
பார்த்து சிரிக்கையில்
அடியெடுத்து நடக்கையில்
அரும்பு மொழி பேசுகையில்
அம்மா என்றழைக்கையில்
வானத்து நட்சத்திரமும்
இவர்களிடம் பேசி சிரிக்கும்
வீட்டை கொலுசொலிபோல்
கல கலவென்று வைத்திருக்கும்
ஐஸ்வர்யங்களின் அட்சயம்
இந்த அரும்புகள்....