கடல்தாண்டும் காதல் பறவைகள்

தொலைதூர கிராமத்தில்
என் கீதங்களை
அழுகின்ற
காதல் விழியே!

பிரிவின் தூரத்தில்
வருடங்களின் பாரத்தில்
உயிரைப் பிழிகின்ற
மௌன மொழியே

இடைவேளை
போல வந்த - இந்த
இடைவெளிக்கு
நன்றி

இனிய மனைவி ..
பிரிவு ஒரு
சுகமான தூரம்

இந்த தூரத்தில் தான்
நமக்குள்
எத்தனை நெருக்கம்...!

கண்மணி
நினைவுகள் உன்னை
சுட்டெரிக்கும்போது
நீ
நட்சத்திரங்களை
எண்ணிக் கொண்டிராதே
என் சித்திரங்களைத் தழுவு

இதோ ...
உனக்கான சித்திரங்களை
பூக்களால்
எழுதிவைக்கிறேன்

உன்
நினைவுகளை
கண்ணீரில்
அழுது வைக்கிறேன்

உன்
ஒர விழிகளில்
பூத்திருக்கும்
நீர் மலர்களைப்
பறித்துவிடு

சிறகுள்ள காதலுக்கு
ஏக்கங்கள் ஏதடி?


கடல் கடந்த பூமியில்
உனைப் பிரிந்து
நான் விதைக்கப்பட்டிருப்பது
எதற்காக ?

என் சிறகே ..
உனக்காக
வானங்களை
வசப்படுத்திக் கொண்டிருக்கிறேன்

என் கிழக்கே
உனக்காக
பூபாளங்களைத்
திரட்டிக்கொண்டிருக்கிறேன் (1993)


('காதலின் பொன் வீதியில் ' நூலிலிருந்து )

எழுதியவர் : கவித்தாசபாபதி (23-Nov-15, 8:31 pm)
பார்வை : 141

மேலே