மாமழை போற்றுதும் ~ஆதர்ஷ்ஜி

மாமழை போற்றுதும் !~ஆதர்ஷ்ஜி
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஊர்ப்பக்கம் பெய்தாலாவது பயனுண்டு என்றார் அப்பா .

ஒரு மணியாவது கழித்து வந்திருந்தால்
துணிமணியாவது காய்ந்திருந்திருக்கும் என்றாள் அம்மா.

கடைவீதி செல்லத் தடையான மழையை
குடையாலே கொல்லத் தயாரானாள் மனைவி.

பட்டாசு வெடிக்கும்வரை போய்விட்டுப்பின்
பள்ளி திறக்கும் நாளில் வரவேண்டினான் மகன் .


கதவைத் திறந்து மழை பார்த்து அமர்ந்தேன் நான்.

மின்னல் பிடித்திறங்கி பேனாவில் மையாகி
மழையே எழுதிக் கொண்டதுபோலொரு கவிதை என் ஏட்டில் !

வந்து மழையாய் கொட்டி விட்டாலும் கவிதையை
வாசித்துக் காட்டத்தான் யாருமில்லை எல்லாருமிருந்த வீட்டில்...!
~ஆதர்ஷ்ஜி

எழுதியவர் : ஆதர்ஷ்ஜி (24-Nov-15, 7:22 am)
சேர்த்தது : ஆதர்ஷ்ஜி
பார்வை : 283

புதிய படைப்புகள்

மேலே