தாயும் தாரமும்

தாய் நம்மைப் பெத்தெடுப்பவள்
தாரம் நம்மைத் தத்தெடுப்பவள்
தாய் நம் சதையைச் சுமந்தவள்
தாரம் நம் விதையைச் சுமப்பவள்

தாய் உணவை ஊட்டியவள்
தாரம் உணர்வை ஊட்டியவள்
தாய் உயிரைக் கொடுத்தவள்
தாரம் உயர்வைக் கொடுப்பவள்

தாய் அன்பைக் காட்டியவள்
தாரம் அழகைக் காட்டியவள்
தாய் உறங்கவைத்து விழித்திருப்பவள்
தாரம் காலை உறங்கும்நேரம் விழி திறப்பவள்

தாய் தொடக்கவுரை தொடுத்தவள்
தாரம் அடக்கவுரை தடுப்பவள்
தாய் வாழ்வில் பாதிவரை வருபவள்
தாரம் வாழ்வில் மீதிவரை வருபவள்

தாயை பாரமாக்காது
தாரத்தை தூரமக்காது
இருவரையும் நாம்
இருக்கும் வரை
இருகண்களை இமைபோலக்காப்போம் .....

எழுதியவர் : குமார் (28-Nov-15, 6:16 pm)
பார்வை : 518

மேலே