சென்னை தாயை ஏமாற்றியவர் யார்

என்
சென்னை தாயை ....
யார் ஏமாற்றினார்கள் ....?
இத்தனை கொடுமையாய் ...
கண்ணீர் வடித்துவிட்டாள்...!!!
அன்று கண்ணகி ஏமாந்தாள்....
மதுரை எரிந்தது .....!!!

சென்னை தாயை ...
யார் ஏமாற்றினார்கள் ....?
இயற்கையை மதிக்காத ...
நயவஞ்சகரா...?
சுய இலாபத்துக்காய் ..
மணல் சுரண்டியவர்களா...?
அரசியல் இல்லாபதுக்காய் .
முறையில்லாமல்
வடிவமைதவர்களா ...?
பதில் சொல்லியே ஆகவேண்டும் ...
என் சென்னை அன்னைக்கு ...!!!

நேற்று நெருப்பு மதுரை ...
இன்று நீர் சென்னை ....
இயற்கையை மதிக்கா விட்டால் ....
நாளை என்னவாகுமோ உலகில் ....?

எழுதியவர் : கவிப்புயல்இனியவன் I (5-Dec-15, 9:31 am)
பார்வை : 79

மேலே