கற்பகதரு

**************
பட்டுத் தெறிக்கும் கதிர்களின் வேகம்
சுட்டெரிக்கும் அந்த உள்ளத்தின் ஆழத்தில்
கொதிப்பை குறைக்கிறது. ..
ஒற்றைத் தெருவில்
தட்டடத்தனியாக
முத்துக்களாக துளிர்த்த வியர்வை
பக்கத்தில் நின்ற
தண்ணீர்க்குளத்தை
பாதி நின்று நிறைத்து வடித்தது.......
கழிவு வாய்க்கால்
கடவான் வெட்டி
தூற்றல்மழை துவாயை நனைத்து
ஏக்கத்தில் எட்டிப்பார்த்த
காளை கலைத்து
பயிருக்கு பாலூட்டி
அந்தி சாயும் பொழுது. ....
இரட்டை சில்லில் ஒன்று பாவம்
தாங்காமல் தூங்கி விட. ...
வண்டியும் நடந்து நொண்டியாக....
கரும்புள்ளியான் தடக்கி
பாலியாறு தாண்டி. ......
எத்தனை இடர்கள் அத் தந்தைக்கு. ..
காயாகி கனியாகி....
சேயாகி கைகளிலே தீபரவ
தீராத பேராவல் ததும்ப. ...
ஒற்றையாய் ஓங்கி நிற்கிறது
இந்த கற்பகதரு. ........
- பிரியத்தமிழ் -

எழுதியவர் : பிரியத்தமிழ் : உதயா (8-Dec-15, 4:47 am)
பார்வை : 106

சிறந்த கவிதைகள்

மேலே