புன்னகை ஒரு நாவல்

உன் புன்னகை
நீ அன்றாடம் வெளியிடும்
கவிதைப் புத்தகம் என்றேன்

அது மரபு வழி வெண்பா
என்கிறான் நண்பன்
அது புதுக் கவிதை
என்கிறேன் நான்

நீயே சொல் !

இரண்டும் இல்லை
காதல் என்னும்
நீண்ட நாவல் என்றாள்

கதாநாயகன் யாரோ
என்றேன்

நீங்கள் இருவரும் இல்லை
என்றாள் !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (16-Dec-15, 3:16 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : punnakai oru naaval
பார்வை : 129

மேலே