முத்தான வரிகள்
பிறக்கும் மனிதன்
வாழும் உலகை தெரிந்தானா/
படைக்கும் இறைவன்
பரம் பொருள் தான் என்று சொன்னானா /
விதைக்கும் உழவன் விளைச்சல்
போதும் என்பானா/
கவிஞன் யாவரும்
உண்மை உரைப்பவர் ஆவாரா /
ஏற்றம் காண்பவன்
ஏணி இதுவென்று சொல்வானா/
ஏழை என்றால்
எதற்கும் சளைத்தவன் ஆவனா /
கற்றவர் யாவரும்
மனிதம் உள்ளவர் ஆவாரா/
மாண்டவர் அனைத்தும்
மண்ணில் புண்ணியம் செய்தவர் ஆவாரா/
சொல்பவர் அனைவரும்
செயலில் வல்லவர் ஆவாரா/
பக்தியில் திளைப்போர்
உத்தம புருஷர் ஆவாரா/
கொடுங் கோல் ஆட்சியில்
கொற்றவன் மட்டும் கெட்டவராவாரா/
நல்லவர் என்பவர்
நாலும் தெரிந்தவர் ஆவாரா/
போதனை செய்பவர்
பக்தி ஞானம் பெற்றவராவாரா/
எல்லாம் இருப்பவர்
இறைவன் என்பவர் ஆவாரா/