முத்தான வரிகள்

பிறக்கும் மனிதன்
வாழும் உலகை தெரிந்தானா/

படைக்கும் இறைவன்
பரம் பொருள் தான் என்று சொன்னானா /

விதைக்கும் உழவன் விளைச்சல்
போதும் என்பானா/

கவிஞன் யாவரும்
உண்மை உரைப்பவர் ஆவாரா /

ஏற்றம் காண்பவன்
ஏணி இதுவென்று சொல்வானா/

ஏழை என்றால்
எதற்கும் சளைத்தவன் ஆவனா /

கற்றவர் யாவரும்
மனிதம் உள்ளவர் ஆவாரா/

மாண்டவர் அனைத்தும்
மண்ணில் புண்ணியம் செய்தவர் ஆவாரா/

சொல்பவர் அனைவரும்
செயலில் வல்லவர் ஆவாரா/

பக்தியில் திளைப்போர்
உத்தம புருஷர் ஆவாரா/

கொடுங் கோல் ஆட்சியில்
கொற்றவன் மட்டும் கெட்டவராவாரா/

நல்லவர் என்பவர்
நாலும் தெரிந்தவர் ஆவாரா/

போதனை செய்பவர்
பக்தி ஞானம் பெற்றவராவாரா/

எல்லாம் இருப்பவர்
இறைவன் என்பவர் ஆவாரா/

எழுதியவர் : பாத்திமாமலர் (20-Dec-15, 6:43 am)
Tanglish : muththaana varigal
பார்வை : 213

மேலே