ஆருயிர் காதலி
ஆருயிர் காதலி..
என்மேல் கோவம் ஏனடி?
உன் வார்த்தைக் கேட்க்க வாய்க்காமல்
உடைவது என்னுள்ளம் தானடி..
தவரென்ன நானும் செய்தேன்?
தயவு செய்து கூறடி.!
நான் இறக்கவே நீயும் பணித்தால்..
அதையும் செய்வேன் பாரடி..!
மனம் திறக்க மறுத்தாயே..
என் அன்பை நீயும் வெறுத்தாயே..
மரண வலியால் தவிக்கின்றேன்..
உயிர் மட்டும் இன்னும் பிரியாமல்..!
இன்று உந்தன் கோவத்தால்..
என் காதல் பொய்த்துப் போய்விடுமோ?
ஒரு வார்த்தைப் பேசிடு பெண்ணே..
உயிர் வாழ்வேன் நானும் கண்ணே..
நீ என்னைப் பிரிந்த பின்னே..
என்செய்வேன் நானும் இங்கே!?