இதழ்களின் வழியே

இதழ்களின் வழியே…
கரையைத் தொடும்
கடலலையின்..
மணற்பரப்பில்
பாதங்களுக்கு ஊடே..
எழும் பள்ளமாய்!
புல்லாங்குழல்களில்
இட்டிருக்கும்
துளைகளில்….
தனித்துளையாய்!
ஊருக்கு வெளியே
ஓதுக்கி வைத்த
சுமை மேடையாய்!
வரப்போரம்
வளருகின்ற
புற்செடிகளாய்!
பனிக்கூழ்
அடைத்த
குடுவைகளின்
மூடிகளாய்!
என்னை நீ
ஒதுக்கினாலும்…
உன்றன்……
புன்னகையின் போது
விழுகின்ற
கன்னக்குழிகளில்
விழுந்து விட்டவனை!
இதழ்களின் வழியே…
இதயத்தில் சேர்த்திடு!
---- கே. அசோகன்.