மீண்டும் மீண்டும்

மந்திரமும் ...தியானமும் தருமமும் யாதும்

மறந்தொரு நாள் காடேகுதலும் தான் மறைந்திடுமோ?


வெற்று உடம்பினை உயிரது நீங்கிட

அழுதிடும் உறவுகள் யாவும் துணையாக வந்திடுமோ ?


மறுபடியும் பாவையொருத்தி உதிரத்தில்

சூலாகி வருந்தி வளர்ந்து உறுகாலமதில் பிறந்திடுவேனோ ?


வளர்ந்து காளையாகி கன்னியொருத்தி தனைத்

தேர்ந்து மணந்து மண்ணில் மீண்டும் மகிழ்ந்திருப்பேனோ ?


மனமுமுயிரும் முதலாயெங்கும் சித்தமும்

சீவனும் ஒன்றாகி இல்லறமே நடத்தி கடந்திடுவேனோ ?


தன் குலம் விளங்க மகவுகள் தமை ஈன்று

பொருள் ஈட்டி பேரும் புகழும் பெற்றிருந்திடுவேனோ? ?


வேடங்கள் புனைந்து நரை பெருகி

திரைகள் கூடி கிழப் பருவம் அடைந்திடுவேனோ ?


நிரந்தரம் எதுவும் இல்லா நிலையிலும்

மீண்டும் மீண்டும் பிறவிகள் எடுத்து வாழ்ந்திருப்பேனோ ?

எழுதியவர் : பாலகங்காதரன் (26-Dec-15, 2:53 pm)
Tanglish : meendum meendum
பார்வை : 94

மேலே