இதயம் உன்னை தேடுது

இதயம்
உன்னை தேடுது
இரு விழிகள்
உன்னை தேடுது
கால்கள் உன்னை
தேடியே ஓடுது
உன்னை காணாமல்
மனம் வாடுது.

நீ எங்கே சொல்லு
வந்து என் முன்னே நில்லு
உன்னாலே
உள்ளே காயம் நூறு
நீ என்னோடு வந்து சேரு

காதல் ,
முயலாய் துள்ளி ஓடுது
உன் நினைவுகள்
புயலாய் என்னை தாக்குது

உந்தன் பெயர் தான்
எந்தன் பாஷை ஆனது
கனவெல்லாம் காதல் ஆனது
உன் முகம் காண்பதே
என் வாழ் நாள் தவம் என்று ஆனது .

" ஏனோக் நெஹும் "

எழுதியவர் : ஏனோக் நெஹும் (3-Jan-16, 6:05 pm)
பார்வை : 414

மேலே