துரோகம்

கண்ட நாள்முதல்
கண்ணுக்குள் உனைவைத்து
நெஞ்சுக்குள் பூஜித்தேன்

நொடி தோறும்
உனை எண்ணி
கனவுகளில் வாழ்ந்திருந்தேன்

உனைச் சேரும்
நாளை எண்ணி
தினம் தோறும் காத்திருந்தேன்

உன் மாய மொழிகளில்
எனை மறந்து உனை
நேசித்தேன்

உன் கடந்த காலத்தை
நான் தேடவில்லை
நிகழ்கால நிஜங்களை யாசித்தேன்

எனக்கே எனக்கானவன்
நீதான் என
இறுமார்ந்திருந்தேன்

எப்படி முடிந்தது உன்னால்
என்னிடத்தில் இன்னொருத்தியை
எண்ணிப் பார்த்திட

நீ செய்த துரோகம்
நியாயம் இல்லை
மன்னிக்கும் மனம்
என்னிடமில்லை

பிரிந்து போக பாதையில்லை
சேர்ந்து வாழ ஆசையில்லை
குடும்ப மானம் காக்க என்
போலி வாழ்க்கை ஆரம்பம்...

எழுதியவர் : கோணேஸ்சர்மி (5-Jan-16, 6:06 pm)
Tanglish : throgam
பார்வை : 109

மேலே