வீஜா போர்ட் - ஹாரர் கதை

கதவுகள் எல்லாம் அடைக்கப்பட்டிருந்தன, ஜன்னல்களும். அவர்கள் முடிவு செய்திருந்தனர், இன்று ஆவியுடன் உரையாடியே தீர வேண்டுமென்று. வீஜா போர்ட் (Ouija Board) பற்றி முதலில் படித்துவிட்டு சொன்னவன் மனிஷ் தான். அவனுக்கு எல்லாவற்றிலும் விளையாட்டு என்பதால் அவன் சொன்னதை முதலில் யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

“எல்லாம் ஹம்பக். இவரு கூப்டதும் ஆவிங்கலாம் வந்து க்யூல நிக்குமாம்” சொல்லிவிட்டு சப்தமாகச் சிரித்தாள் ஜாஸ்மின்.

“உங்களுக்குலாம் பயமா இருக்குனு சொல்லிட்டு போ. டோன்ட் ஆக்ட் ஸ்மார்ட்”

மனிஷ் இப்படி சொன்னதும் தான் நகுலுக்கு கோபம் வந்தது. அவன் கோபப் பட்டதற்கு அவன் ஜாஸ்மினின் காதலன் என்பதை இரண்டாவது காரணமாகதான் சொல்ல முடியும். முதல் காரணம் அவனுடைய கர்வம். அவன் தன்னை மிகவும் தைரியசாலி என்று கருதுபவன்.

“ஹேய் யாருக்கு பயம். எனக்கா?” என்று அவன் மனிஷின் சட்டையை பிடிக்காத குறையாய் கேட்டான். அவர்கள் மூவரும் கல்லூரி ஹேங்கரில் நின்று கொண்டிருந்தனர்.

“பயம் இல்லனா வா. விளையாடுவோம்…”

நகுல் ஜாஸ்மினின் முகத்தை பார்த்தான். அவள், “எனிதிங் ஃபைன் பார் மீ” என்றவாறே தோள்களைக் குலுக்கினாள்.

“சரிடா. நாங்க ரெடி. இன்னைக்கு நைட் ஓ.கே?”

“உடனேலாம் ஒண்ணும் பண்ணமுடியாது. முதல போர்ட் ரெடி பண்ணனும். நிறைய ரூல்ஸ் இருக்கு. அதுக்கு முன்ன விளையாட ஒரு நல்ல இடம் வேணும்…”

“நல்ல இடம்னா?”

“பிரச்சனை இல்லாத இடம். ஸ்டார்ட் பண்ணுனா ஆவி எப்ப வரும்னு தெரியாது. அதுவரைக்கும் யாரும் தொந்தரவு பண்ணக் கூடாது. நிச்சயம் எங்க வீட்ல முடியாது”

“எங்க வீட்லயும் கஷ்டம் தான். எங்க அப்பாவோட போலிஸ் மூளைக்குத் தெரியாம எதுவும் பண்ணமுடியாது” நகுல் சொல்ல,

“அப்ப ஜாஸ்மின்…” என்று மனிஷ் இழுத்தான்.
_____________________________
நன்றி: அரவிந்த் சச்சிதானந்தம்

எழுதியவர் : பகிர்வு:செல்வமணி (5-Jan-16, 10:04 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 104

மேலே