யார் இறைவன்

பல கோடி மக்களுண்டு..
பல நூறு தெய்வமுண்டு..
எத்தனையோ மதங்களுண்டு...
எத்திசையும் கோவிலுண்டு!!

உண்மையில் யார் தான் இறைவன்?

மலர் தூவி பூசித்தேன்..
மெழுகேற்றி பிராத்தித்தேன்..
மண்டியிட்டும் பார்த்துவிட்டேன்!

யார் தான் இறைவன்?

மதத்தைக் கொண்டு,
மனிதனைப் பிரிக்கும்
கருவியாமோ இறைவன்!?

அல்ல,
மனிதம் போற்றி மகிழ்ந்து வாழ,
அழிப்பவனே இறைவன்!!

மனதின்,
வலி நீங்கும்
வழி காண பிறந்ததே..
இறை நம்பிக்கை!!

விண்ணிலும் , மண்ணிலும்,
கல்லிலும் காணும் இறைவனை..
உன் மனதினுள் காண
மறந்தாயே மனிதா!!

கண் கானா கல்லின் பொருட்டு..
மனிதருள் பிரிவுற்று வாழாதே!!

படைப்பாளி இல்லாமல்,
படிப்பேது அகிலத்தில்!?

உன் படைப்பின் காரணம் என்ன??
நோக்கம் புரிந்து வாழ்ந்திடு!!

மனித சக்தி முடிகையிலே..
தெய்வ சக்தி உதவிடும்!
நீ முயன்று முடிக்காமல்,
உண்டியலில் பணம் போட்டு பயன் இல்லை!!

உன் நன்றியை மட்டும் பிரார்த்தனையாக்கு!!
வேண்டுகோள் விடுத்து காத்திராதே!!

தெய்வத்தின்...
நாமங்கள் மாறலாம்...
உருவங்கள் மாறலாம்..
வழிபாடு மாறலாம்..
வணங்குவோர் மாறலாம்..
நம்பிக்கை யாவர்க்கும் ஒன்றே!!

உன் நம்பிக்கை தான் இறைவன்!!

எழுதியவர் : நேதாஜி (7-Jan-16, 12:34 pm)
சேர்த்தது : நேதாஜி
Tanglish : yaar iraivan
பார்வை : 403

மேலே