ஆளுநர் பதவியும் தேவையில்லை

2011 ஆகஸ்டு மாதம் தமிழக ஆளுநராக பதவியேற்ற ரோசய்யா, இந்த நான்காண்டுகளில் எவ்வளவு செலவு செய்திருக்கிறார் என்ற விபரத்தை கோவை வழக்கறிஞர் திரு.லோகநாதன் தகவல் பெரும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்றிருக்கிறார்.

அதன்படி:

💥156.14 ஏக்கர் பரப்பளவு கொண்ட கிண்டி ராஜ்பவன் வளாகம் ஆளுநர் அலுவலகம், வீடு, ஊழியர் அலுவலகங்கள், குடியிருப்புகள் உள்ளடக்கியது.இவற்றை பராமரிக்க, 1.27 கோடி.

💥2011 ஆகஸ்டு முதல் 2015 மே மாதம் முடிய மின் கட்டணம் 36.24 லட்சம்.

💥கடுமையான மின்வெட்டு காலத்திலும் மின் பயன்பாடு உச்சத்தில் இருந்திருக்கிறது.

💥சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் மெர்சிடஸ் பென்ஸ், ஸ்கோடா உட்பட நான்கு கார்கள் புதிதாக வாங்கப் பட்டுள்ளன.

💥இவற்றின் பராமரிப்பு செலவு மட்டும் 11லட்சம் ரூபாய்.

💥எரிபொருள் செலவு 52 லட்ச ரூபாய்.

💥ஏற்கனவே இருந்த 3 கார்கள், ஆட்டோ பராமரிப்பு செலவு 25 லட்ச ரூபாய்.

💥நான்காண்டு தொலைபேசிக்கட்டணம் சுமார் 36 லட்ச ரூபாய்.

💥கிண்டி ராஜ்பவனில் பணியாற்றும் 83 பேருக்கு மாதச்சம்பளமாக ரூபாய் 22.67 லட்சம்.

💥உதகையில் 86.72 ஏக்கர் பரப்பளவு உள்ள இடத்தில் மாளிகையில் பணியாற்றும் 24 பேருக்கு மாதச் சம்பளமாக ரூபாய் 6.47 லட்சம்.

💥ஆளுநரின் பயணச்செலவுக்கு ரூ.1.22 கோடி..

💥470 முறை விமானப் பயணம்.

💥1400க்கும் மேற்பட்ட விழாக்களில் அரசு விழாக்கள் 15% மட்டுமே.

💥ஆளுநர் பங்கேற்ற தனியார் நிகழ்ச்சிகள் 85%..இதற்கு செல்லவும் அரசு வாகனங்களே பயன் படுத்தப்பட்டிருக்கின்றன.

💥தனியார் நிகழ்ச்சிகளில் பெறப்பட்ட பரிசுகள் பற்றிய விபரங்கள் கொடுக்கப் படவில்லை..

ஆதாரம்: "ஜூனியர் விகடன் 11/11/2015 இதழ்.

மக்களின் வரிபணத்தை ஆடம்பரமாக செலவு செய்து வாழும் ஆளுநரும் நமக்கு தேவையில்லை. இந்த ஆளுநர் பதவியும் தேவையில்லை. இப்பதவியை நீக்க சட்ட திருத்தத்தை நாம் அனைவரும் கோர வேண்டும்.

எழுதியவர் : பகிர்வு:செல்வமணி (7-Jan-16, 11:08 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 43

மேலே