குற்றஞ் சொல்லாதீர் - சந்தோஷ்

நியாய விலைக்கடையில்
அநியாயம் நடப்பதெல்லாம்
குற்றமேதுமில்லை
பொது மக்களே..

முதலில் நீங்கள்
வரிசையில் நின்று பழகுவீர்..

ஆள வந்தவரெல்லாம்
ஊழல் செய்வதெல்லாம்
தப்பேதுமில்லை
பொது மக்களே..

முதலில் உங்கள்
வாக்குகளை ரூபாயில் தொலைக்காதீர்.


அரசியல் வஞ்சக கரம்பட்டு
ஜனநாயக மங்கை
ஆடை அவிழ்ந்துவிட்டதாக
கூப்பாடு போடுவதை நிறுத்தி..

முதலில் உங்கள்
கண்ணியத்திலொரு மேலாடை
தயாரிக்க தயாராவீர்...

பிறகு........
மாறும்... ..யாவும்.
வரும் புது.. புரட்சியாவும் ..!
மலரும்..மறுமலர்ச்சியாவும்..!



-இரா.சந்தோஷ் குமார்.

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (13-Jan-16, 1:51 pm)
பார்வை : 173

மேலே