கல்லறையாக்கப்பட்ட கைதிகள்
எல்லாம் இருந்தும் எதையோ தொலைத்தது போல்
ஏதோ ஒரு வழியில்
எங்கே என்று தெரியாத
எங்கேயோ ஒரு பயணம்.....
எதிரே வருபவன் நல்லவன்
முதுகுக்கு பின்னே
சென்றால் அவனே
என்னை ஏறிமிதிக்கும்
கொலைகாரன்.......
ஒருவனுடன் மனம் விட்டு
பேச பயம்....
மனம் விட்டு சிரிக்க
பயம்....
இங்கே யாவரும் கல்லறை யாக்கப்பட்டவர்கள்....
ஏதோ கருவறையில்
இருந்து வந்ததால் தன்னை
மட்டும் புனிதமென நினைத்து ,
புனித்தையெல்லாம் பலியாக்கிய பாவிகள்....
யாரிடத்திலும் நல்லெண்ணம்
இல்லை
என்ற ஒரி வரிக்குள்ளெ ஆயிரம் துரோகிகளாய்
ஒவ்வொருவனுக்குள்ளூம்
ஆயிரம் பேர்கள் .......
முகம் -இது இருப்பவர்களை
இதுவரை நான் பார்த்ததில்லை.
இல்லாதவர்களை தான்
பார்த்துக்கொண்டிருக்கிறேன்...