நாங்கள்
நாங்கள் ....
அடையாளமற்றவர்களின்
அடையாளம்
ஆண்பாலா ? பெண்பாலா ?
என்ற குழப்பத்தில்
அ:.றிணை ஆக்கப்பட்ட
ஆறறிவு ஜீவன்கள்
எப்போதுமே
தொடங்கப்படாத
முடிந்த கதை .
எப்போதாவது
மேற்கோளாக்கப்படும்
முற்றுப் புள்ளி
விதைத்தவர்களே
களை எனச் சொல்லும்
விடுகதைகள்
பட்டுப் பூச்சியாகும்
தருணங்களில்
இறகிழக்கும் சாபதாரிகள்
வரலாறு -
ஏதோவோர்
மாலிக்காபூரை மட்டும்
மறதியாய் பதிந்தது
மற்றபடி
அந்தபுரங்களில் தான்
எங்களின் ஆயுள் .
எங்களின் பயணங்கள்
யாவையும்
எங்களுக்குள்தான்
ஆனால்
திசைகளை மட்டும்
தீர்மானிக்கத் தெரிவதில்லை
இறுதிவரை .
.