கொடுப்பதில் இன்பம்

பனித்துளி பனித்துளி ஓன்று
பசும் புல்லிடம் புகலிடம் கேட்டிட
கேட்டதும் கொடுத்தது
தன் மடிமீது தான் பசும் புல்லே
பசும் புல்லே பசும் புல்லே
இரவு மட்டும் போதும்
நான் உறங்க நான் உறங்க
சூரியன் வந்ததும் வந்ததும்
முடிந்தது முடிந்தது என் வாழ்வே
புல்லின் மென்மையில் தன் மேனி
உறங்கிட பனித்துளி கண்ட சுகம்
சொர்க்கமே சொர்க்கமே
புல்லின் மகிழ்ச்சிக்கோ எல்லையில்லை
கொண்டேன் என் மடிமீது பனித்துளி
கண்டேன் அதன் தண்மையும் குளிர்மையும்
பனித்துளி என் மடிமீது உறங்கிட
நான் என்ன தவம் செய்தேனோ
கொடுப்பதில் என்னே இன்பம்/
ஆயுள் எல்லாம் வாழ இந்த இன்பம் போதும்
ஈகை இன்புற்று வாழ்வதற்கே

எழுதியவர் : பாத்திமாமலர் (22-Jan-16, 4:12 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
பார்வை : 246

மேலே