மறைந்த நண்பருக்கு மலரஞ்சலி

இன்று ஒரு அன்பு மலர் இறையடி சேர்ந்தது ...

என் நண்பா ... நீ

மலர்ந்தது போதும் என மாயவன் நினைத்தானோ ..?

உன் மூச்சை நிறுத்தும் முன்னே .. அவன்

உன் மழலைதனை நினைத்தானா ? ...

அப்பா வருவாரே தித்திக்கும் பொருளோடு

என அத்திக்கில் காத்திருக்கும் அன்பான மழலைக்கு ....

அத்தனையும் முடிந்ததென எப்படித்தான் நான் சொல்வேன் ....?

அயல்நாடு வந்து உந்தன் இன்னுயிரை நீத்தாயே

அன்பான என் நண்பா ....

உன் ஆன்மா சாந்தி பெற அந்த எல்லாம்

வல்ல இறைவனையே வேண்டுகின்றேன் ....

எழுதியவர் : கலைச்சரண் (24-Jan-16, 6:44 pm)
பார்வை : 164

மேலே