தொலைந்து போன கடிதம்

Follow Us
Dinamani
Monday, January 25, 2016
இ-பேப்பர்
dinamani-epaper



முகப்பு > கவிதைமணி
தொலைந்து போன கடிதம்: ஹாஜா மொஹினுதீன்
By dn, இரவாஞ்சேரி
First Published : 25 January 2016 08:58 AM IST
பக்திக்கு அடுத்த வரியில்

பதிய வைக்கும் ;

ஒற்றை வார்த்தை ;

எழுதாத விரல்களும் உள்ளதா ?

"நலம் நலமறிய ஆவல் " !

காதல் பூக்களை

கவிதையாய் கொட்டும்

கடிதம் எங்கே ?

வறண்ட காலங்களை

வசந்த காலங்களாய் மாற்ற வரும்

கடிதம் எங்கே ?

சைக்கிள் மணி ஓசையையும் !

சலங்கை (கொலுசு ) மணி ஓசை மிஞ்சுமே !

சந்து எல்லை நோக்குமே !

சமாதானம் அடையுமே !



கையில் கிடைக்கும்

கடிதத்தால் !

கவலை மறந்து பறக்குமே !


மறைத்து வைத்து படிக்குமே !

நினைத்தபோதும் படிக்குமே !

நெஞ்சை விட்டு நீங்காமல் !

நெஞ்சுக்குழியில் நிற்குமே !


உதடுகள் தீண்டாமல்

உள்ளங்கள் நனையும்

உன்னத வரிகளும்

கடிதங்கள் காட்டுமே !


துயரம் மறந்து சிரித்ததும் ;

துணைக்கால் சேர்த்து வந்ததால் ;

"பல் வலியும்" மாறின

"பால் வாளியாய்" மாறியதால் !


தொலை தொடர்பு வளர்சியால்

"தொலைந்து போன கடிதமே"

கண்ணீரில் வாடினேன் !

கவலைகொண்டு தேடினேன் !

எழுதியவர் : hajamohinudeen (25-Jan-16, 10:00 am)
சேர்த்தது : H ஹாஜா மொஹினுதீன்
பார்வை : 132

சிறந்த கட்டுரைகள்

மேலே