பயனற்ற சொந்தங்கள்
துடிக்கும் பொழுது
நினைக்காது
நின்ற பின்னும்
துடிக்காது
வாசல் வழி
சென்றாலும்
வா என்று
அழைக்காது
ஒரு உருண்டை
சோற்றுக்கு
செல்லாத கதைகள்
சொல்லி
வாய்க்கரிசி இட்டு
விட்டு
பாசம் என்று
பாசாங்கு செய்து
இருக்கும் பொழுது
ஈயாது
செத்தபின்னே சுவற்றுக்கு
படைக்கும்
பயனற்ற சொந்தங்கள்.
-புன்னகை பொன்மலர்