நாங்க பாத்துக்குறோம்டா

மோட்டுத் தெரு முனீஸ்வரன் தம்பியும்
தர்காத் தெருவுல கயிறு பின்னும் உசேன்பாயும்
நொண்டியாட்டம், பாண்டி, உண்டி வில்லு
அடிக்கறதுல பேரு போன பெரியசாமி
எல்லாரையும் விட்டு விட்டு
வடக்கப் போன நோஞ்சான்பய
..நானு
இன்னமும் அஞ்சுக்கும் பத்துக்கும்
அல்லாடுற இந்த சின்ன வயசு
விளாட்டு தோழனுக முன்னாடி
நா மட்டும் ..
நல்லாருக்கேன்னு சொல்ல முடியாம
எங்கியோ எண்ண யாபாரம்
பண்ணிக்கிட்டு இருக்கதா சொல்லிட்டு
அவனுக மொகத்தப் பாத்தேன்..
..
விடுறா..
..
இங்கனயே வந்துரு ..
நாங்கல்லாம் சேந்து ஒனக்கு
ரெண்டு வேளை கஞ்சி
ஊத்த மாட்டமா ..
கடைசி வரைக்கும்னு
சொல்லிட்டு
தோள் மேல கை போட்ட உசேன் பாய
சூப்பருடான்னு ..
சொல்ற இவனுக கிட்ட
..
என்ன சொல்றதுன்னு
தெரியாம நா
முழிக்கிறத எப்படி சொல்றது ?

எழுதியவர் : கருணா (பாலகங்காதரன்) (30-Jan-16, 2:18 pm)
பார்வை : 230

மேலே