நான் கடவுள்
ஒரு கட்டத்தில்
அவள் தன்னை
பைத்தியம் என்றே
நம்பத் தொடங்கினாள்....
எங்கிருந்தோ
வந்த ஒருவன்
அவளுடன் சேர்ந்து
"உனது பைத்தியமே
எனது தேடல்...
ஆதலால்
இன்று முதல்
நீ ஏவாளாய் போ"
என்று வரம் தந்து
புன்னகைத்தான்....
அவன் வேறு
யாரும் இல்லை....
ஏவாள் மீது
கொண்ட காதலால்
ஆதாமைக் கொன்ற
கடவுள்...
கவிஜி
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
