காக்கா காக்கா மை கொண்டா

எம்.ஜி.ஆர் – சாவித்ரி நடித்து 1957 ல் வெளிவந்த மகாதேவி திரைப்படத்தில், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இயற்றி, எம்.எஸ்.விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசையமைப்பில் பின்னணிப் பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி பாடிய ஒரு அருமையான குழந்தைப் பாடல் ’காக்கா காக்கா மை கொண்டா’. இன்றும் குழந்தைகளுக்குப் பாடிக் காட்டலாம்.
காக்கா காக்கா மை கொண்டா
காடை குருவி மலர் கொண்டா
பசுவே பசுவே பால் கொண்டா
பச்சைக் கிளியே பழம் கொண்டா (காக்கா)
உத்தம ராஜா என் கண்ணு
பத்தரை மாத்துப் பசும் பொன்னு
உள்ளம் மகிழ்ந்திட வந்திடுங்க
உடனே எல்லாந் தந்திடுங்க (உத்தம ராஜா)
ஆஆஆஆஆஆஆ
பசுவே பசுவே பால் கொண்டா
பச்சைக் கிளியே பழம் கொண்டா (காக்கா)
கல்லைக் கையால் தொட மாட்டான்
தொல்லை ஏதும் தர மாட்டான்
சொல்லால் செயலால் உங்களுக்கே
நல்லன என்றும் செய்திடுவான்
ஆஆஆஆ
பசுவே பசுவே பால் கொண்டா
பச்சைக் கிளியே பழம் கொண்டா (காக்கா)
சாப்பிட உங்களைக் கூப்பிடுவான்
சமர்த்தாய் அவனும் நடந்திடுவான்
தோப்பில் துரவில் தூங்காமல்
சுருக்காய் ஓடி வந்திடுங்க (சாப்பிட)
பசுவே பசுவே பால் கொண்டா
பச்சைக் கிளியே பழம் கொண்டா (காக்கா)