தூது சென்று வா என் வெண்ணிலாவே

கண்ணுறங்கும் வேளையிலே கனவினில் அவள் வந்திடுவாள் என் வெண்ணிலாவே
கனவு கலைந்தால் வருத்தம் தந்துவிட்டு போய்விடுவாள் என் வெண்ணிலாவே

கண்ணிமையை வந்து வருடுகிறாய் தோழி நீயும் இரவினிலே
காதலின் உணர்வுகளை நீதான் நன்கு அறிந்திடுவாய் என் வெண்ணிலாவே

தனிமையில் இரவும் பகலும் தினம் வருந்தி நான் வாடுகிறேன்
தண்ணிலவை என்னருகில் கூட்டி வந்து சேர்த்துவிடு என் வெண்ணிலாவே

தேய்ந்தாலும் வளர்ந்தாலும் வானத்தில் நீ அழகுதான் தோழி
தேயாத நிலா அவளிடம் நீயும் பொறாமை கொள்ளாதே என் வெண்ணிலாவே

எனக்காக ஒருமுறை பதினாலாம் பிறை இன்று தூது சென்று வா
உனக்காக ஒருநாள் விடுமுறையில் சென்று பின் திரும்பி வா கவின் வெண்ணிலாவே !

---கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (3-Feb-16, 10:16 am)
பார்வை : 231

மேலே