நா 100 பொற்காசு தருகிறேன்
ஒரு புலவர் மன்னனைப் புகழ்ந்து பாடினார்.
புலவர் பாடலில் மனம் மகிழ்ந்தார் மன்னர்.
தன்னைப் புகழ்ந்து பாடிய புலவருக்கு நுõறு பொற்காசுகள் பரிசாக வழங்க முடிவு செய்தார் மன்னர்.
“ யாரங்கே, கஜானாவில் இருந்து நுõறு பொற்காசுகளை எடுத்து வா” என்று உத்தரவிட்டார்.
பிறகு, புலவர் பக்கம் திரும்பி, “ புலவரே,கொஞ்சம் இரு, நான் நுõறு பொற்காசுகள் உனக்குப் பரிசளிக்கிறேன்” என்றார்.
சேவகர்கள் தங்கத் தட்டில் நுõறு பொற்காசுகளை எடுத்து வந்தனர்.
அதை வாங்கி, அப்படியே புலவரிடம் கொடுத்தார் மன்னர்.
அதைப் பார்த்த புலவர், “மன்னா, தாங்கள் இப்போது தானே இருநுõறு பொற்காசு தருகிறேன் என்றீர்களே?” என்றார்.
மன்னரும் இரு என்பதை இருநுõறு என்று நினைத்துவிட்டாரோ என நினைத்து இரு நுõறு பொற்காசுகளை கொண்டு வந்தார்.
உடனே புலவர், “மன்னா, முன்னுõறு தருகிறேன் என்றீர்களே? அதையே கொடுங்கள்” என்றார்.
மன்னரும் சிரித்தப்படி முன்னுõறு பொற்காசுகளை கொண்டு வந்தார்.
மறுபடியும் புலவர், “ மன்னா, நானுõறு தருகிறேன் என்றீர்களே? அதையும் கூடவா மறந்து விட்டீர்கள்” என்றார்.
மன்னருக்கு ஒன்றும் புரியவில்லை. புலவர் ஏதோ நம்மிடம் வார்த்தை விளையாட்டு விளையாடுகிறார் என்று எண்ணி, அவர் கேட்ட நானுõறு பொற்காசுகளை கொண்டு வந்தார்.
நானுõறு பொற்காசுகளை புலவரிடம் கொடுத்த மன்னர் அவரிடம், “புலவரே, ஏன் இப்படி மாற்றி, மாற்றி கேட்டீர்கள். நான் எங்கே அப்படி எல்லாம் சொன்னேன்” என்று மன்னர் கேட்டார்.
புலவர் விளக்கினார்.
“நீங்கள் இரு, நுõறு பொற்காசுகள் கொண்டு வருகிறேன் என்றீர்கள். மறந்தீர்களா?”
“ ஆமாம். கொஞ்சம் இரு என்ற பொருளில் அதைச் சொன்னேன்.” என்றார்.
உடனே புலவர் ,“இப்படிதான், இரு, நுõறு தருகிறேன் என்றீர்கள். முன்னால் நுõறு தானே தருவேன் என்றீர்கள். அதை முன்னுõறு என்று சொன்னேன். அடுத்து நான் நுõறு தருவேன் என்றீர்கள். நான் அதை நாநுõறு என்று நினைத்து கேட்டேன். இதுதான் நடந்தது.” என்று புரியும்படி சொன்னார்.
புலவரின் வார்த்தை விளையாட்டை பாராட்டி, அவருக்கு கை நிறைய பொற்காசுகளைக் கொடுத்து அனுப்பி வைத்தார் மன்னர்.
********************