ஒரு ஜீவனின் உயிரை அறிவாயா நீ 555

என்னுயிரே...
பிறையான உன் வெளுத்த
நெற்றியில்...
இன்னொரு கண்ணைபோல்
திறந்திருக்குமே அந்த அட்டைப்பொட்டு...
அதை எடுத்து என் காதல்
காவியத்தில் ஒட்டிகொண்டேனே...
சுடிதாரில் இருந்து ஒருநாள்
நீ சேலையில் வந்தபோது...
நீ முன்னாள் நடக்க நான்
உன் பின்னால் வந்து...
அந்த சேலை தலைப்பினை எடுத்து
உனக்கு தெரியாமல்...
என் முகத்தை மெல்ல
துடைத்து கொண்டேன்...
இன்று என் கரம் பட்ட மலரும் காதல்
கடிதமும் ஏனடி கசக்கி எறிந்தாய்...
நீ எரிந்தது காகிதமல்ல...
ஒரு ஜீவனின் உயிர்
என்பதை நீ அறிவாயா.....