வேலை

ஒரு குட்டிப்பொண்ணு தாத்தாவோட பேசிட்டு
நடந்து போச்சாம்.அவரோட கை சுருக்கங்களைப்
பார்த்துட்டு தாத்தா உங்க தோல கடவுள் தான் செய்தாரா?
என்று கேட்டது....
-
ஆமா
-
தன்னோட கைய தொட்டு பாத்துட்டு என்னுதையுமா?
என்றது......
-
ஆமான்டா, ஆனா என்னுத ரொம்ப நாள் முன்னாடி
செஞ்சாரு உன்னுத இப்ப தான் செஞ்சாரு
-
அது பொறுமையா சொன்னது
-
இப்பல்லாம் கடவுள் நல்லா வேல செய்ய
கத்துக்கிட்டாரு இல்ல?

எழுதியவர் : செல்வமணி (8-Feb-16, 10:57 pm)
Tanglish : velai
பார்வை : 272

மேலே