பின்னிரவின் மழைத்தூறல்

பின்னிரவின் மழைத்தூறல் நிலம் நனைத்த பின்னோடே
செந்நிறத்தில் சிரம் தூக்கும் முன்காலைக் கதிரவனின்
மென்தழலின் வெப்பத்தில் நில ஈரம் மறைந்தாலும்
தன் கிளையில் நீர் நிறுத்தி பின் தெளிக்கும் மரத்தடியில்
ஈரம் உடன் மறையாமல் நெடுநேரம் நிலைப்பது போல்
வருகின்ற செல்வந்தனை வீண் செலவு செய்யாமல்
மரக்கிளைகள் பிடித்திட்ட நீர்போல சேமித்து
சிரத்தையுடன் செலவழித்தால் நம்வாழ்க்கை சீருருமே.

எழுதியவர் : ரமேஷ் ( கனித்தோட்டம் ) (13-Feb-16, 5:35 pm)
பார்வை : 76

சிறந்த கவிதைகள்

மேலே