காதல் கவிதைத் துளிகள்

அவள் முகத்தைப் பார்த்து
தன்னை அலங்கரித்துக் கொண்டது
கண்ணாடி.

அவள் வருகின்ற வீதியில்
விற்பனைக்கு கிடைப்பதில்லைப்
பூக்கள் .

கோடை காலத்தில்
ஆலங்கட்டி மழை.
அவள் பார்க்கிறாள் .

கண்ணைப் பறிக்கவில்லை மின்னல்.
காணவில்லை இதயம் .
கடந்து போயிருக்கிறாள் அவள் .

*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (20-Feb-16, 1:52 am)
பார்வை : 265

மேலே