கட்டு…

கல்யாணமெனும்
கால்கட்டு போட்டபின்னே
கைக்கு எட்டியது குழந்தை..

பிள்ளை வயிறு காயாதிருக்க,
வாயைக் கட்டிய
வயிற்றைக் கட்டிய உழைப்பு
பெற்றோருக்கு..

வாழ்வைக் கட்டிய வறுமையிலும்
வளர்க்கின்றனர் பிள்ளையை,
வறுமையைக் காட்டாமலே..

வாலைக் காட்டுகிறது அது
இவர்களை
வேலைசெய்ய விடாமலே..

வறுமைக்கட்டை அவிழ்க்கமுடியாமல்
பாசக்கட்டை மறைத்து
பெற்றோர் போட்டதுதான்
இந்தப்
பாசக் கயிறு…!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (20-Feb-16, 7:11 am)
பார்வை : 67

மேலே