என்னவளே என்னவளே

என்னவளே
என்னவளே.....என்னுயிருள்
என் ஆயுளாய்
இருந்தவளே.....!!

விலகி நீ
போன நாள்
முதலாய்....இந்த
உலகே
எனக்கில்லை
என்றானது.....!!

போராடிப் பெறும்
நிலைக்கு
காதலும் வன்முறை
என்றாகிப்
போனதா.....??

சண்டையிட்டு
பெறாத
சுதந்திரம்.....தானாய்
அமைந்தால்
மண்டியிட்டு
வாங்கியதாய்
போய்விடும்....!!

உன்
நிழலில் வாழ்ந்தாலே
போதும் என்று
இருந்தேன்....நீ
வெளிச்சத்தில்
வராமல் போனதால்
ஏமாந்து போனேன்.....!!

தொலைவில்
நீ..... தோல்விகள்
என்னச் சேருதே....
கனவில் நீ
வந்தாலே காணாமல்
போகும் என்
கஷ்டங்கள்.....நிஜமாய்
நீ என்கூட இருந்தால்
இருக்காதே இன்னல்கள்.....!!

கண்ணே மணியே
கண்மணியே
விழியெல்லாம்
வலிக்குதே.....உள்ளமும்
உன்னைக்
கேட்டு தவிக்குதே.....!!

எழுதியவர் : தம்பு (1-Mar-16, 4:34 pm)
Tanglish : ennavale ennavale
பார்வை : 139

மேலே