காதல் செய்!

எண்ணங்களை ஏட்டில்
வண்ணங்களாக்கும் முயற்சி
கவிதை!

காதல் மட்டுமல்ல
காற்றின் லயம் கூட
கவிதைக்கு வரியாகலாம்!
நிலவின் நிறம் கூட
நெஞ்சத்தை சூறையாடலாம்!

கவிதை கற்பனையே!
காதலும் கூடத்தான்! - எனினும்,
கற்பனை நலமே!

நிசப்தம் மட்டுமே
நிரந்தரமாய் நீண்டிருக்கும்
வெறுமை வெளியில்
வண்ணத் தூரிகையால்
வானம் வரைந்தது
கற்பனையே!

வாழத் தெரிந்தவர்கள்
காற்றோடும் காதல் செய்பவர்கள்! - அதிலும்,
வாழ்த்தைப் பெற்றவர்கள்
கற்பனையை கவிதையாக்கியவர்கள்!

எழுதியவர் : ஆதி அந்தம் (16-Jun-11, 1:06 am)
பார்வை : 560

மேலே