மறைகூடச் சொல்கிறதே

பிஞ்சுக் கால்களை
அன்புக் கரம்தாங்கி
ஆசையாய் முத்தமழை
அன்பு மகன் பாதத்தில்..!

பாதத்தை முத்தமிடும்
பத்தினித் தாயே..உன்
பாதத்தில் தானே
ஈடேற்றம் எனக்கு..!

ஈரைந்து மாதங்கள்
இடரோடு சுமந்து
ஈ எறும்பு தீண்டாமல்
இமையாகிக் காத்தவளே..!

உறக்கத்தில் கூட
இரக்கம் காட்டிடும்
உன் கருணைக்கு ஈடு
உலகத்தில் இல்லையம்மா..!

மறைகூடச் சொல்கிறதே
மாதா உன் புகழ் போற்றி
மனிதனோ அதை மறந்து
போகிறானே உனைத் தாழ்தி..!

அபு நசீர்

எழுதியவர் : அபு நசீர் (3-Mar-16, 5:18 am)
சேர்த்தது : அபு நசீர்
பார்வை : 256

மேலே