காதல் வருவதெல்லாம் பெண்விழிகளினால்

வெண்மதியே அடி வெண்மதியே
நீ என் வாழ்வின் வெளிச்சமடி
கண்வழியே அடி பூவழகே
என் இதயத்தில் இறங்கிவிட்டாய்
இந்த காதலினால்
உயிர் பிரிந்து சென்று
உன் கால் விரல் புகுந்ததடி
காதல் வருவதெல்லாம் பெண்விழிகளினால்
அதை உன்னால் அறிந்துக்கொண்டேன்
தங்க புதையல் உன்னை
கண் கண்டதுமே இன்ப காதலில் புதைந்ததடி

மாறிவிட்டேன் ரொம்ப மாறிவிட்டேன்
என்று வசை சொல் கேட்கிறதே
உடலுக்குள் மின்னல் புகுந்தது போல்
வலி என்னை வருத்துவதென்
பசி மறந்தேன் தமிழ் ருசி மறந்தேன்
என்னை முழுவதும் நான் நான் மறந்தேன்
மரண வலி இன்று உணர்ந்துகொண்டேன்
அது ஒருதலை காதலடி
இன்ப சாரலா வெள்ள தூரலா பெரும் சோதனை வந்ததடி
கண்பார்வையால் விடை தந்து செல்லடி
உந்தன் பதில் என் ஆயுள் அடி

உந்தன் தேவைகளை வாய்மொழியும் முன்பே அறிந்ததை அடைந்திருப்பேன்
உந்தன் மெளனங்களை புரிந்துக்கொண்டு அதன்படி நான் நடப்பேன்
உந்தன் வெண்ணிறத்தை கவர வரும் தீ கதிர்களை சிறையிடுவேன்
புன்னகையால் நீ பூத்திருக்க அந்த சொர்க்கத்தில் குடில் அமைப்பேன்
அந்த வானத்தை தைத்து உந்தன் ஆடையாய் விண்மீன்களை அலங்கரிப்பேன்
நீ தூங்கவே செதுக்குவேன் கட்டிலை அந்த வெண்ணிலவை பிடித்து .......

( என்னவளே அடி என்னவளே என்னும் பாடல் மெட்டில் எழுதப்பட்ட பாடல் வரிகள் )

எழுதியவர் : கவி தமிழ் Nishanth (3-Mar-16, 9:27 am)
பார்வை : 201

மேலே