காதலை சுமந்து காத்திருக்கிறேன்

புயலாகவோ காற்றாகவோ
சட்டென கடந்துவிட
உன்னால் முடிகிறது
பயணங்களை காரணம்சொல்லி...

பிழைப்பைத்தேடி
பிரயாணிக்கும் உன்
காலடிகளுக்கு கேட்குமா?
இதயத்தின் பரிதவிப்பு நொடிகள்

உன் மூச்சுக்காற்றை முழுவதுமாக
தழுவி முக்தியடைய தவமாய்
என் உயிர்குழலும் உதிரக்குழாய்களும்!

கடவுளை சந்திக்க
காத்திருக்கும் பக்தனாய்
காதலை சுமந்து காத்திருக்கிறேன்
உன் பயணப்பாதைகளெங்கும்

உன் பார்வையின் எடையில்
சிலநேரம் சிறகாய்,
பலநேரம் சருகாய்
என்நேசம்!

எனினும் உன்னைச்சுமந்து
பறக்க எத்தனிக்கிறேன்
சாத்தியமாகிறது பறத்தலென்பது
இம்முடமான பறவைக்கும்!

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு முகநூல்) (3-Mar-16, 10:02 am)
பார்வை : 68

மேலே