சோழனின் கனவு காதல்

கொடியிடை
என் விரல் சூழ ,
குளிர்பனி
அவள் முகம் நாட,
கனி இதழ் முத்தம்-
கொஞ்சம் கொஞ்சியும்
கெஞ்சியும் கவிதையாய் அரங்கேற,
வான்பிறை ஒளியில்
அவள் நாணங்கள்
நடனங்கள் ஆட,
காவிரிக் கரைநீரில் காதல்
கலந்திங்கு ஓடியது.
அவள் கண்களின் சிறை சேர
மனம் கைதியாய் வாடியது;

எழுதியவர் : கவிப்பிரியன் (7-Mar-16, 10:57 am)
பார்வை : 78

மேலே