வா என்னவனே

சொர்க்கம் நான் என்று
உன் வாய்மொழி கேட்க
மெய் சிலிர்க்குதடா
உன் அன்பை கண்டு...

அடம் பிடித்து கேட்கிறாய்
உன் அருகிருக்க
வேண்டுமென்று - மறுத்து
போவதெ ங்கனம்
எனக்கென்றே வாழ்பவனை...

இன்பமும் துன்பமும்
துணை நின்றே
ஜெயிப்போம் - உன்
இனியவளாகிட இந்
நொடி சம்மதம்...

வா என்னவனே,..
உன் விரல் பிடிப்பேன்,
காதலை வித்திட்டே
நாம் வாழ்வை சுவைப்போம்..

எழுதியவர் : கவிப் பிரியை - Shah (15-Mar-16, 10:44 pm)
Tanglish : vaa ennavane
பார்வை : 942

மேலே