பயமாய்

பயமாய் கழியும் பாதி வாழ்க்கை
பாவத்தின் செயலாய் மீதி வாழ்க்கை!

நாளும் பொழுதும் நகருதய்யா
நிச்சயமில்லா விடியலில் நித்தமும் தான்!

சூழ்நிலை தானே வாழ்வின் ருசி
வாய்ப்புகள் தானே வாழும் பசி!

அர்த்தம் புரியாத வார்த்தைக்கு மதிப்பு இல்லை
அழகை ரசிக்காத மனங்களில் அமைதியில்லை!

அகத்தின் சௌகர்யம் அன்பு நிலை
ஆச்சர்யமான கோபம் தொல்லை!

எழுதியவர் : கானல் நீர் (25-Mar-16, 11:35 am)
Tanglish : payamaay
பார்வை : 74

மேலே