மனிதம்

மரத்து போன
மனச்சிலுவை சுமந்து
கயமையின் கல்வாரி மலைகளில்
நிராசையின் முட்கிரீடம் சூடி
மனிதம் குற்றுயிராய் அலைகிறது !
முப்பது வெள்ளிக்காசுகளை
முப்பது கோடியாக்கும்
வித்தைகள் அறிந்த
சீடர்களின் தனிநிறம்
இங்கு வெளுத்துப் போகவில்லை !
மதங்களின் ஆணிகளால்
மனிதத்தின் தேகத்தில்
பெருகுகின்றன குருதி ஊற்றுக்கள் !
பாவங்கள் மட்டுமே செய்யும்
ஜாதிக் கற்கள் ரணங்களை முத்தமிட்டு
மரண வாயிலுக்கு மனிதத்தை
இட்டுச் செல்கின்றன !
வேலிதாண்டிய வன்புணர்வுகள்
பாவங்களை பிரசவிக்கின்றன !

மனிதமே !
நீ உயிர்த்தெழும்
ஞாயிறு என்று உதயமாகும் ?

எழுதியவர் : ஜி ராஜன் (25-Mar-16, 11:51 am)
Tanglish : manitham
பார்வை : 160

மேலே