உன்னில் கலந்திருப்பேன் நான் 555

என்னவளே...

நான் உன்னை பார்த்த நாள்முதல்
அனுஅனுவாய் உன்னை ரசிக்கிறேனடி...

உன் கண் இமைகளின்
அசைவில் இருந்து...

உன் இதழ்களின் ரேகைகள்
உன் இதழ்களின் அசைவுகள்...

உன் கூந்தலின் நீளம் அது மெல்ல
காற்றில் ஆடும் சிலமுடிகள்...

உன் கருவிழியின்
கீழ் இருக்கும் மச்சம்...

அதில் கிளைகள் போல் ஓடும்
ரத்தநாளங்கள்...

உன் பாதங்களில் சங்கீதம்பாடும்
வெள்ளி கொலுசு...

நீ பின்னி முடிந்த கூந்தலில்
மனம் வீசும் மல்லிப்பூ...

உன் காதோரம் ஆடும் காதணி உன்
கழுத்தை தழுவி இருக்கும் பாசிமணி...

நீ சிரித்தாள் உன்
கன்னத்தில் விழும் குழி...

நீ கோபத்தில்
அழுகையோடு உதடு சுழிப்பது...

உன் அழகிலிருந்து நான்
சேர்த்து வைத்திருக்கும்....

என் காதலை எல்லாம்
உன்னிடம் சொல்ல ஆரமித்தால்...

நீ தாங்குவாயா
என் இம்சை ராணியே...

உன்னாலே நான் ஆனேன்
கலாரசிகன்...

கவிதையின் காதலன்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (25-Mar-16, 5:59 pm)
பார்வை : 336

மேலே