தேவதை

தேனிதழ் கொண்ட தேனே,
உன்னிரு விண்மீன் கண்களால்
என்னைக் கொல்லாதே...

கொஞ்சம் உடைந்துதான் போனேன்,
உன் உதட்டோரப் புன்னகையில்,
கள்ளவிழிப் பார்வை வீசி,

நெஞ்சில் புயல் வீச வைத்த சிலையே,
உன் விழியெனும் கடலில் விழுந்த
என் இதயமெனும் நீர்த்துளி எங்கேயடி அழகே...

நீரின் கருவில் தீயாய்த் தோன்றி,
செப்பு நேர்மென் கொங்கை கொண்டு
சீறிவரும் தீநதியே..!

நீராய் மாறி உன்மடியில் கலப்பேன்
என் மோகத்தீயணைக்க,
எனை ஆட்கொள்வாய்...

எழுதியவர் : வெண்தேர்ச்செழியன் (28-Mar-16, 1:20 pm)
Tanglish : thevathai
பார்வை : 7633

மேலே