வெங்கடேசன் கண்ணன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  வெங்கடேசன் கண்ணன்
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  31-Oct-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  28-Mar-2016
பார்த்தவர்கள்:  510
புள்ளி:  26

என்னைப் பற்றி...

நான் பழமையை நேசிப்பவன், ஆனால் அதன் நினைவுகளில் வாழ்பவனல்லன்...
நிகழில் வாழ்பவன், ஆனால் எதிர்காலத்தை கட்டமைப்பவன்...
நான் எதுவாக விரும்புகிறேனோ அவ்வாறே ஆகிறேன்.
எழுதுகையில் கவிஞன் ஆகிறேன்,
வரைகையில் ஓவியன் ஆகிறேன்,
இசைக்கையில் கலைஞன் ஆகிறேன்,
இசையை இரசிக்கையில் இசைப்பிரியன் ஆகிறேன்,
இவ்வனைத்தும் கற்கையில் மாணவனும் ஆகிறேன்,
நான் என்றும் மனித நேயத்துடன் வாழ விரும்பும் ஓர் பிறவியும் ஆகிறேன்...

என் படைப்புகள்
வெங்கடேசன் கண்ணன் செய்திகள்

கிராமத்துக் காதல்

காலங்கூட தெரியாம காலாற நடந்தபயல,
மூக்குத்தி அழகால உன்பின்னால திரிய வச்சியே,
உதட்டோர சிரிப்பால நெஞ்சத்த இனிக்க வச்சியே,
இடுப்போரம் மடிப்பால கள்ளக்கூட 
மறக்க வச்சியே,
கெண்டைக்காலு செவப்பால பித்துப்
பிடிக்க வச்சியே,

கரும்பு கூட கசந்து போகு உன் இனிப்பு பேச்சால,
சோறுகூட தேவப்படல உன் நெனப்பு வந்தால,

ஏரியோரம் காத்திருந்தேனே உன்
ஓரக்கண்ணு பார்வைக்கு,
எதிர்பாத்த கண்ணுக்கு உன்
அழகுமுகத்த காட்டுனப்போ,

நெஞ்சாங்கூட்டுல நூறுநெலாவும்
ஒன்னாசேந்து சிரிச்சுச்சே,
ஆகாசத்தெரையில மின்மினிப் 
பூச்சியெல்லாம் நாடகத்தப்
போட்டுக்காட்டி நம்ம காதல்
கதையப் பேசுச்சே,

பட்டிக்காட்டுப் பயலுக்கு
பாசத்தை காட்டினியே,
களவாணிக் கருப்பனுக்கு
காதல்தான் ஊட்டுனியே,

நீயிருக்கும் தெசபாத்து, 
கைகோக்க வந்தேனே,
நெழல்கூட தொடவிடாம, 
கண்ணவிட்டு மறஞ்சிட்டியே,

நேத்து பெஞ்ச மழையில, 
இன்னைக்கி மொளச்ச
காளான்தான் உம்பாசம்னு 
சொல்லாம சொல்லிப்புட்ட,

சொல்லிப்போன வார்த்தைக்கு 
அர்த்தங்கூட வெளங்காம, 
வயக்காட்டு பொம்மையையும்
கல்யாணத்துக்கு கூப்பிட்டே,

பஞ்சவர்ண கிளிபோல உன்ன
நானும் அலங்கரிச்சு , அழகுக்கு
அழகு சேக்க கூரைப்பட்ட வாங்குனே,

ஊரு சனங்க வியந்து பாக்க,
கல்யாண சேதி சொல்லி, 
உங்கழுத்துல நாங்கட்ட, 
தாலிக்கு தங்கங்கூட,
வயல வச்சு வாங்குனே,

புள்ளவொன்னு எனக்கு குடுத்து
அப்பான்னு கூப்பிட வெப்பான்னு
நெனச்சேனே,
நெனப்பயெல்லாம் வாரி சுருட்டி
தீய கொழுத்திப்போட்டாளே,

தேடித் தேடி சேத்த தேனாட்டம்
ஊறிப்போன காதலையும்,
ஒத்தக்கல்லு ஒதவியால
அடிச்சே கலச்சிட்டியே,

கலங்குன கண்ணுல தண்ணியின்னும் வத்தலயே,
வத்திப்போன தொண்டைக்கு தாகங்கூட எடுக்கலயே,
எடுபட்ட சிறுக்கி மனசுல கொஞ்சங்கூட
ஈரமில்ல,
ஈரமில்லா நெஞ்சுலயும்
பாற்கடல வார்த்த புள்ள,

சினிமாப்பாட்ட கேட்டாலும் அது
உன் நெனப்ப கூட்டுதே,
சின்னக்குளம் படித்துறையும் 
நம்ம கொஞ்சல் காட்டுதே,

பஞ்சுத்திரி கணங்கூட இல்லாத நெஞ்சுக்குள்ள,
எடதெரியா பாரம் வச்சு பூமியோட
பொதச்சுப்புட்ட,

உன்னுறவ மறந்துவிட 
நட்புறவ தேடுனே,
அந்த உறவும் கைய விட,
பூமி விட்டு போறே...!!!

- வெண்தேர்ச்செழியன்



மேலும்

வெங்கடேசன் கண்ணன் - வெங்கடேசன் கண்ணன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Mar-2016 12:33 pm

துக்கம் வேண்டாம் தோழா,
என் கைகள் உன் துணையாகும்.

துவண்டு விடாதே தோழா,
என் கைகள் உனைத் தாங்கும்.

வலிகள் வேண்டும் தோழா,
வாழ்வுதனை செம்மையாக்க.

தோல்விகள் வேண்டும் தோழா,
வெற்றியை நிலைநாட்ட.

கோவம் வேண்டாம் தோழா,
அமைதி பெருகும்.

கர்வம் வேண்டாம் தோழா,
இன்பம் கூடும்.

பணிவுகொள் தோழா,
உயர்ந்தவரைக் கண்டால்

துணிவுகொள் தோழா,
எதிரியைக் கண்டால்.

நூல்பல படி தோழா,
அறிவு பெருகும்.

இசைபல கேள் தோழா,
நிம்மதி கிடைக்கும்.


தமிழே நன்மொழி,
அறிந்திடு தோழா.


தமிழே உயர்மொழி,
கர்வம்கொள் தோழா.


தமிழுக்கென்றும் அழிவில்லை,
இறைவனுக்கே தெரியும் தோழா....

மேலும்

மிக மிக நன்றி... 30-Mar-2016 3:37 pm
அருமை 30-Mar-2016 3:26 pm
வெங்கடேசன் கண்ணன் - வெங்கடேசன் கண்ணன் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Mar-2016 11:29 am

இத்தளத்தில் கவிதையின் கீழ் தேர்வுகள், தேர்வு செய்தவர்கள், மற்றும் வாசகரின் முகப்பு பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் புள்ளி இவையாவும் எதைக் குறிக்கிறது?
மற்றும் எதைக்கொண்டு புள்ளிகள் மதிப்பிடப்படுகின்றன ? 

மேலும்

அன்பு பிருந்தா, கவிதையை தமிழில் எழுதினால் இன்னும் நன்றாக இருக்கும்... 30-Mar-2016 1:31 pm
Ennavane, unnai mattum anuppi vittu andru.. unnudan unnavalin uyiraum anupivittu udalai mattum sumakum nadai pinamanen...enuyirai unathakki unakkai unnul valum eval endrum un varakayai enni...... 30-Mar-2016 12:48 pm
வெங்கடேசன் கண்ணன் - வெங்கடேசன் கண்ணன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Mar-2016 10:35 am

பௌர்ணமியில் இரு நிலவுகள்,
என்வீட்டு மாடியில் அவள்.

மேலும்

அழகு 30-Mar-2016 3:27 pm
என் தோழியின் வருகையில் உதிர்த்த கவிதை. :) 30-Mar-2016 11:33 am
அடடா அழகான காட்சிகள் எழுதப்படா கவிதை 30-Mar-2016 11:24 am

இத்தளத்தில் கவிதையின் கீழ் தேர்வுகள், தேர்வு செய்தவர்கள், மற்றும் வாசகரின் முகப்பு பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் புள்ளி இவையாவும் எதைக் குறிக்கிறது?
மற்றும் எதைக்கொண்டு புள்ளிகள் மதிப்பிடப்படுகின்றன ? 

மேலும்

அன்பு பிருந்தா, கவிதையை தமிழில் எழுதினால் இன்னும் நன்றாக இருக்கும்... 30-Mar-2016 1:31 pm
Ennavane, unnai mattum anuppi vittu andru.. unnudan unnavalin uyiraum anupivittu udalai mattum sumakum nadai pinamanen...enuyirai unathakki unakkai unnul valum eval endrum un varakayai enni...... 30-Mar-2016 12:48 pm
வெங்கடேசன் கண்ணன் - வெங்கடேசன் கண்ணன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Mar-2016 10:41 am

மழை தரும் மண்வாசம்,
பூக்களுக்கு கோவம்.

மேலும்

அருமை 30-Mar-2016 3:23 pm
மிக்க நன்றி தோழரே... 30-Mar-2016 11:23 am
அழகான ரசனை நனைக்கும் மழைத் துளிகள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 30-Mar-2016 11:21 am
வெங்கடேசன் கண்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Mar-2016 10:41 am

மழை தரும் மண்வாசம்,
பூக்களுக்கு கோவம்.

மேலும்

அருமை 30-Mar-2016 3:23 pm
மிக்க நன்றி தோழரே... 30-Mar-2016 11:23 am
அழகான ரசனை நனைக்கும் மழைத் துளிகள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 30-Mar-2016 11:21 am
வெங்கடேசன் கண்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Mar-2016 10:39 am

தாகம் தணிய மண் கேட்ட வரம்,
பெய்யென பெய்த மழை.

மேலும்

அருமை 30-Mar-2016 3:22 pm
தாகம் தீர்க்கும் நிலமும் விண்ணும் பரிமாறும் கொடுக்க வாங்கல் மழை 30-Mar-2016 11:23 am
வெங்கடேசன் கண்ணன் - முஹம்மது பர்ஸான் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Mar-2016 3:15 pm

உன் மனதின் புழுதியிலே
காதல் விதை நான் விதைத்தும்

மழையாக மாறி
அன்பு மழை நான் தெளித்தும்

தூக்கத்தை தினம் தொலைத்து
சொல்லுக்கு உயிர் கொடுத்தும்

உன் மனதின் ஆழத்தில்
நம் காதல் வேரோட
நீயாக உன் மனதில்
தடையொன்று இட்டதென்ன...

தற்காலிகக் காதலியே!
தடையங்கள் இல்லாமல்
தவிக்க விட்டுப் போனதென்ன...!
***

மேலும்

என் நண்பனின் காதலை கவி பாட அவள் காய் வெட்டியது காரணமாய். 30-Mar-2016 12:31 pm
சுமையின் பாதையில் நினைவின் தேடலாய் வரிகள் 30-Mar-2016 11:13 am
வெங்கடேசன் கண்ணன் - வெங்கடேசன் கண்ணன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Mar-2016 1:20 pm

தேனிதழ் கொண்ட தேனே,
உன்னிரு விண்மீன் கண்களால்
என்னைக் கொல்லாதே...

கொஞ்சம் உடைந்துதான் போனேன்,
உன் உதட்டோரப் புன்னகையில்,
கள்ளவிழிப் பார்வை வீசி,

நெஞ்சில் புயல் வீச வைத்த சிலையே,
உன் விழியெனும் கடலில் விழுந்த
என் இதயமெனும் நீர்த்துளி எங்கேயடி அழகே...

நீரின் கருவில் தீயாய்த் தோன்றி,
செப்பு நேர்மென் கொங்கை கொண்டு
சீறிவரும் தீநதியே..!

நீராய் மாறி உன்மடியில் கலப்பேன்
என் மோகத்தீயணைக்க,
எனை ஆட்கொள்வாய்...

மேலும்

இதிலேயே வேண்டியபடி திருத்தி மாற்றியமைத்துக் கொள்ளலாம். 29-Mar-2016 5:36 pm
மிருதிருதனங்கொண்டு - சேர்ந்து வருவது தகுந்த பொருள் தரவில்லை என்றே நினைக்கிறேன். 'செப்பு நேர்மென் கொங்கை' வேறு ஒரு பாடலில் தற்செயலாகக் கிடைத்தது. மிருதிருதனங்கொண்டு சீறிவரும் தீநதியே என்ற வரியை, 'செப்பு நேர்மென் கொங்கை கொண்டு சீறிவரும் குளிர்நதியே' என்று மாற்றலாம். செப்பு = சொம்பு போன்ற நேரான மென்மையான மார்பினை உடைய என்று பொருள் வரும். நீராய் மாறி உன்மடியில் கலப்பேன் என் மோகத்தீயணைக்க, எனை ஆட்கொள்வாய். 29-Mar-2016 2:47 pm
மிருதுவான இரு தனங்களைக் கொண்ட - ஏதேனும் தவறு இருந்தால் திருத்திக் கொள்ள ஒரு வாய்ப்பு அளிக்கவும்... 29-Mar-2016 1:09 pm
மிருதிருதனங்கொண்டு என்றால் என்ன பொருள்? சொல்லை எப்படிப் பிரித்துப் பொருள் கொள்வது? 29-Mar-2016 1:00 pm
மேலும்...
கருத்துகள்

மேலே